முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு!

முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு!

விசாக வழிபாடு

முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு.
புதுக்கோட்டை மேலராஜவீதியிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணி சுவாமி. புதுக்கோட்டை மேலராஜவீதியிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணிக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முருகனுக்குகோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags

Next Story