பரமபதம்... சொர்க்கவாசல் திறப்பு

சாத்தூர், வெங்கடாஜலபதி கோவிலில் பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடந்தது.

தமிழக முழுவதும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் பரமபதம் என்னும் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. மேலும் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அதிகாலையில் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவி லில் பரமபதம் என்னும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சியை காண சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags

Next Story