வைகுண்ட ஏகாதசி விழா

திருச்செங்கோட்டிலுள்ள மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி ஹெச்பி காலனி அருள்மிகு மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது, அருள்மிகு மகாலட்சுமி வைகுந்த வெங்கடேச பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது, சொர்க்கவாசலில் திறப்பின் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும் முழக்கமிட்டனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது

Tags

Next Story