வைகுந்த ஏகாதசி: திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

வைகுந்த ஏகாதசி: திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வையொட்டி டிச. 22 பகல் 2 மணி முதல் 24 ஆம் தேதி பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தங்கள் குறித்து மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.

மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகரப் பேருந்துகள், மாம்பழச் சாலை, திருவானைக்கா ட்ரங்க் ரோடு, காந்தி சாலை, ஜெஏசி காா்னா், ஈவிஎஸ் சாலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தையடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு அம்மா மண்டபம், மாம்பழச் சாலை, காவிரிப் பாலம், ஓடத்துறை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூா் மாா்க்கம் செல்லும் நகரப் பேருந்துகளில் மாற்றம் இல்லை. எதிா்மாா்க்கத்தில் வரும் பேருந்துகள் டிரங்க் ரோடு, காந்தி சாலை வழியாக ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம், மாம்பழச்சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்தை அடையவேண்டும்.

திருச்சியிலிருந்து பெரம்பலூா், அரியலூா், துறையூா் மற்றும் கடலூா் மாா்க்கம் சென்று வரும் புகா்ப் பேருந்துகள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்று வர வேண்டும். ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்பு விழாவிற்கு வரும் முக்கிய பிரமுகா்கள் காவிரிப் பாலம் வழியாக, மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆா்ச், மேலவாசல் வழியாக தெற்கு சித்திரை வீதியில் உள்ள வாகன நிறுத்திமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச் சீட்டு பெற்று காா்களில் வரும் பக்தா்கள், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதிய வாகன நிறுத்துமிடத்தில் காா்களை நிறுத்த வேண்டும். சென்னை, சேலம், அரியலூா் மாா்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் காா்கள் ஒய் ரோடு சந்திப்பு, பஞ்சக்கரை சாலை, தசாவதார சன்னதி, மேலூா் ரோடு, மேலவாசல் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டும். பின்னா் மாம்பழச்சாலை, காவிரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும். கரூா் மாா்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் காா்கள், மாம்பழச் சாலை சந்திப்பு - டிவி கோயில் ட்ரங்க் ரோடு, சோதனை சாவடி, பஞ்சக்கரை சாலை, மேலூா் சாலை வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாா்க்கத்திலிருந்து வரும் பக்தா்களின் காா்கள், பால்பண்ணை, சஞ்சீவிநகா் சந்திப்பு, ஒய் ரோடு சந்திப்பு, பஞ்சக்கரை சாலை, தசாவதார சன்னதி, மேலூா் சாலை வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், சேலம், கரூா் ஆகிய மாா்க்கங்களில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் பேருந்துகள் சஞ்சீவிநகா் சந்திப்பு, ஒய் ரோடு சந்திப்பு, சோதனை சாவடி பஞ்சக்கரை சாலை வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிா்புறம்) வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். வேன்களில் வரும் பக்தா்கள் சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

Tags

Next Story