வையப்பமலை முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலை முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கிரிவலம் 

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சித்ராபவுர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மல்லசமுத்திரம் அடுத்த, வையப்பமலையில் மலைக்குன்றின்மீது பாடல் பிரசித்திபெற்ற சுப்ரமணிய சுவாமி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் சித்ராபவுர்ணமி தினத்தை முன்னிட்டு, மதியம் 12;30மணியளவில், மலைமீது உச்சிகால பூஜை நடந்தது.

அதனைதொடர்ந்து, மலையின் தெற்குபதியில் உள்ள கொங்கணசித்தர் குகையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அன்னதானம் நடைபெற்றது. 6.30மணியளவில், உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story