வழித்தடத்தை மாற்றிச் செல்லும் வைப்பாறு

வழித்தடத்தை மாற்றிச் செல்லும் வைப்பாறு

 வழித்தடத்தை மாற்றிச் செல்லும் வைப்பாறு  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆற்றங்கறை அணைக்கட்டில் மேல்புறம் உள்ள ஆற்றுக்கறை உடைந்து பட்டா நிலங்கள் 5 ஏக்கர் அளவிற்கு ஆற்று நீரால் அரிப்பு ஏற்பட்டு ஆறு திசைமாறி பட்டா நிலங்கள் வழியாக அணைக்கு வெளிப்பகுதியில் ஓடுகிறது. இந்த வைப்பாறை நம்பி 10 கிராமங்கள் குடிநீர் பெற்று வருகின்றன. இதனால் வருங்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் தமிழக அரசு அரிப்பு ஏற்பட்ட பட்டா நிலத்தின் உரிமையாளருக்கு நிவாரணம் மற்றும் நிதி உதவி பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆற்றங்கரை மற்றும் சிங்கிலிபட்டி, கல்குமி கிராம பொது மக்களின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் சீதாராமன், செல்லகுமார், சேது ராஜ் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தகவல் அறிந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்தார்.

Tags

Next Story