வளையப்பட்டி மலையாண்டி கோவிலில் சுவாமி வீதி உலா!

வளையப்பட்டி மலையாண்டி கோவிலில் சுவாமி வீதி உலா!

 சுவாமி வீதி உலா

வளையப்பட்டி மலையாண்டி கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திர மண்டகப்படி விழாவில் பொன்னமராவதி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா, ஏஎல்.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக சேங்கைக்கரை செல்வவிநாயகர் மற்றும் உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மலையாண்டி சுவாமி மற்றும் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளியபின் நான்கு ரத வீதிகள், அண்ணா சாலை, நாட்டுக்கல், வலையபட்டி வழியாக மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்ற விழா ஏற்பாடுகளை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ். கணேசன், செயலர் டி. செல்வக்குமார், பொருளாளர் சையது அபுதாஹிர், பங்குனி உத்திர மண்டகப்படி விழாக்குழு தலைவர் எம்.எஸ். தங்கராஜ், கௌரவத் தலைவர் ஜெ. நாச்சியப்பன், செயலர் எம். ராமசாமி, பொருளாளர் எஸ். திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story