வள்ளலார் பிறந்தநாள் கொண்டாட்டம்

வள்ளலார் பிறந்தநாள் கொண்டாட்டம்

வள்ளலார் பிறந்த நாள் 

குமாரபாளையம்விடியல் ஆரம்பம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் பிறந்த நாள் விழா குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்த இந்த கூட்டத்தில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்த யாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி மூட்டை வழங்கப்பட்டன. நந்தகுமார், சண்முகம், சூர்யா, கோபாலகிருஷ்ணன், நஞ்சப்பன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story