மேல்மருவத்தூர் சென்ற வேன் மரத்தில் மோதி விபத்து: 14 பேர் காயம்.

மேல்மருவத்தூர் சென்ற வேன் மரத்தில் மோதி விபத்து: 14 பேர் காயம்.

விபத்துக்குள்ளான பேருந்து

செய்யாறு ஆற்காடு சாலையில் மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் வேன் மரத்தில் மோதி விபத்து 14 பேர் காயம் அடைந்தனர்.

செய்யாறு ஆற்காடு சாலையில் மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் வேன் மரத்தில் மோதி விபத்து 14 பேர் காயம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அரசு கலைக்கல்லூரி எதிரே சாலையில் உள்ள மரத்தின் மீது குடியாத்தம் பகுதியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது இதில் வேனில் பயணம் செய்த 14 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இதில் மூன்று பேருக்கு பலத்த காயமும் மற்றவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். ஆற்காடு சாலையில் உள்ள புளியமரம் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் இடமாக உள்ளதாகவும்,

எனவே புளிய மரத்தை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது இவ்விபத்து குறித்து செய்யாறு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story