வண்டலூர் பூங்கா ஊழியர் மன உளைச்சலில் உயிரிழப்பு

வண்டலூர் பூங்கா ஊழியர் மன உளைச்சலில்  உயிரிழப்பு
வண்டலூர் பூங்கா
வண்டலூர் பூங்கா ஊழியர் மன உளைச்சலில் உயிரிழப்பு
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டன. இதில், இரண்டு குரங்குகள் நேற்று முன்தினம் காலை, உணவு வைக்கும் போது, கூண்டில் இருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றன. அப்போது, ஜான் என்ற நிரந்த ஊழியரும், சுகுணா, 45, என்ற தற்காலிக பெண் ஊழியரும் பணியில் இருந்தனர். இரண்டு நாட்களாகியும், குரங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மன உளைச்சலில் இருந்த சுகுணா, நேற்று காலையில் இருந்து உணவு அருந்தாமல் இருந்துள்ளார். நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுகுணா இறந்தது தெரியவந்தது.

Tags

Next Story