வாணியம்பாடி : தலைமை சிறை காவலர் சிறையில் மது அருந்தும் வீடியோ வைரல்

வாணியம்பாடி : தலைமை சிறை காவலர் சிறையில் மது அருந்தும் வீடியோ வைரல்

வீடியோவில் உள்ள காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் வாணியம்பாடி கிளைச்சிறைசாலை உள்ளது, இந்த சிறையில் தற்போது 35 கைதிகள் உள்ளனர். 1 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் சுழற்சி முறையில் சிறையில் பணியாற்றி வரும் நிலையில் இந்த கிளைச்சிறைசாலையில் தலைமை காவலராக பணியாற்றும் ஜெயகுமார் என்பவர், கிளை சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் கைதிகளின் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும், மேலும் அவர்களை இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி வர கூறுவதாகவும், மேலும் சிறைவாசிகளின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது வாணியம்பாடி கிளைச்சிறை தலைமை காவலர் ஜெயகுமார் பணியில் இருக்கும் போதே கிளை சிறைசாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பணியின் போது அநாகரீக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story