வாணியம்பாடி: ஆபத்தை உணராமல் சிறுவர்கள் சைக்கிள் சாகசம்

வாணியம்பாடி: ஆபத்தை உணராமல் சிறுவர்கள் சைக்கிள் சாகசம்

சைக்கிள் சாகசம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிரதான சாலையான வாணியம்பாடி- ஆலங்காயம் சாலை பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த சாலையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் சைக்கிள் சாகசம் செய்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story