வாணியம்பாடி : செய்தியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

வாணியம்பாடி : செய்தியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருட்டு நடந்த வீடு 

வாணியம்பாடியில் செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து வைர மூக்குத்தி, 5 சவரன் தங்க நகை, 46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வாணியம்பாடி நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், இதனை அறிந்த மர்ம நபர், விக்னேஷ் வீட்டின் பூட்டை, உடைத்து, உள்ளே நுழைந்து, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை, 46 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், வைர மூக்குத்தி, மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்,

பின்னர், இன்று அதிகாலை வீடுதிரும்பிய விக்னேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம், மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது, உடனடியாக விக்னேஷ் இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் குடியிருப்பு அதிகம் உள்ள நியு டவுன் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்,வைர நகை மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story