வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆடுதுறை நகர வன்னியர் சங்கம் சார்பில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி மெழுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி அனுசரிக்கப்பட்டது.

ஆடுதுறை நகர வன்னியர் சங்கம் சார்பில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி மெழுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி அனுசரிப்பு. மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழக முழுவதும் வன்னியர் சங்கம் பாமக நிர்வாகிகள் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறை நகர வன்னியர் சங்கம் சார்பில் ஆடுதுறை கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த குரு அவர்களின் பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு ஆடுதுறை நகர வன்னியர் சங்க செயலாளர் எம்.இளஞ்செழியன் தலைமையில், முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.குமார், பாமக நகர செயலாளர் எம்.சாமிநாதன், நகர வன்னியர் சங்க தலைவர் பி.வினோத் ஆகியோர் முன்னிலையில் ஏராளமானோர் மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மெளன அஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தினர்.

இதில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ம.க ஸ்டாலின், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.பி.குமார், தஞ்சை வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மதி.விமல், பேரூராட்சி கவுன்சிலர் ம.க.பாலதண்டாயுதம், நகர தலைவர் எம்.வெங்கடேஷ், பாமக மூத்த முன்னோடி சுந்தர், கே.ரமேஷ்‌, ஆர்.மணிகண்டன், அ.அருண், பால.ஜவகர், ஆர்.சாமிநாதன், ராமு, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story