பொறையாறில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பொறையாறில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

கைதான விஏஓ


பட்டா விண்ணப்பத்திற்கு பரிந்துரை செய்ய 2500 ரூபாய் கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரைச் சேர்ந்த நாகலெட்சுமி பட்டா கேட்டு பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். அதனை பரிந்துரை செய்ய, பொறுப்பு விஏஓ. பாண்டியராஜ், லஞ்சம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 2500 ரூபாய் நோட்டை, விஏஒ பாண்டியராஜ் பெற்றபோது, மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, பொறையார் விஏஓ அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு பாண்டியராஜிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story