லஞ்ச வழக்கில் தலைமறைவாக இருந்த விஏஓ., கைது

லஞ்ச வழக்கில் தலைமறைவாக இருந்த விஏஓ., கைது

பைல் படம்

முசிறியில் துணை தாசில்தார் லஞ்சம் பெற்றதில் தொடர்பு இருந்ததாக கூறி கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
முசிறியை சேர்ந்தவர் கண்ணன், இவர் நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக 27.12.2023 அன்று முசிறி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, அவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை தாசில்தார் தங்கவேல் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி விஜயசேகருக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமநிர்வாக அதிகாரி விஜயசேகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story