புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 29 ல் வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 29 ல் வரையாடு கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 29 ல் வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் வரையாடு கணக்கெடுப்பு ஏப்ரல் 29ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் வரையாடு கணக்கெடுப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன் முன்னிலை வகித்தார். தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், நாட்டிலேயே முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' ரூ.25 கோடியில் செயல்படுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, வரையாட்டு இனங்களை பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல், ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனத்தை பாதுகாக்கம் வகையில் 2022 - 2027 காலத்தில் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மையத்தில் வன அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் துணை இயக்குனர் தேவராஜன் பேசிய போது மேற்கு தொடர்ச்சி மலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வரையாடுகள் வாழ்வதால், அவற்றுக்கு தேசிய அளவிலான முக்கியத்துவம் இல்லை. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேம்பாட்டுக்கு நீலகிரி வரையாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நீலகிரி வரையாடுகள் உண்ணும் தாவரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் வரையாடுகள் கணிசமாக இருப்பதால் இங்கிருந்து கணக்கெடுப்பு தொடங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் வரையாடு அதிகமாக வாழும் 30 பகுதிகளை தேர்ந்தெடுத்து ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய மூன்று நாட்கள் வரையாடு கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதில் வனத்துறை அலுவலர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இவ்வாறு பேசினார்.இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகர்கள், வனப்பாதுகாவலர்கள், வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story