கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்

பல்லடம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி வார்டு எண் 10 மற்றும் 11-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணிக்காபுரம் குட்டையில் உயர்நிலை மேம்பாட்டு பணி, வார்டு எண் 5-ல் மங்களம் சாலையில் 15வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, மற்றும் நகராட்சி பொது நிதியின் கீழ் மகாலட்சுமி நகர் பகுதியில் இருந்து செந்தோட்டம் கிழக்குப் பகுதி வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, தெற்கு பாளையம் வார்டு எண் 3 ,கணபதி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அபிவிருத்தி செய்யும் பணி ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர். வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லடம் நகர்மன்ற தலைவர் கவிதா மணி ராஜேந்திரன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story