முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி

முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி

மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கோபுரம் அறக்கட்டளை, நந்தினி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, அரசு ஐடிஐ நீமங்கலம், அரசு ஐடிஐ கோட்டூர் ஆகிய இடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள முன்னாள் படை வீரர்கள் திருவாரூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விருப்பத்தினை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story