அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கி வைப்பு

அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கி வைப்பு

பணிகள் துவக்கம் 

கடலூர் மாவட்டம், அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம் அங்கு செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் 50 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி துவக்கி வைக்கப்பட்டது அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள மேற்கு தெரு பகுதி மற்றும் புதிய காலனி பகுதிகளில் மண் சாலை உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கு தெரு புதிய காலனி ஆகிய பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கவும் மற்றும் திருவேங்கடம் நகரில் நியாய விலை கடை புதிதாக கட்டவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில் AGMT திட்டத்தின் கீழ் மேற்கண்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன் , ஊராட்சி செயலாளர் சங்கர் , வார்டு உறுப்பினர்கள் , நட்ராஜ் , முருகன் , மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story