அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை, திருக்கல்யாணம் நடந்தது.

பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை, திருக்கல்யாணம் நடந்தது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயிலான கிழக்கு ரத வீதியில் பெரிய நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புனிதநீர் நிரப்பிய கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாக பூஜை க்கு பின் பிரகதீஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன், திருக்கல்யாணம்,ரிஷப வாகனத்தில் சுவாமி, பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து அய்யர், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.

Tags

Next Story