சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

வருசாபிஷேகம் 

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில்  வருஷாபிஷேகம் கோலாகலமாக  நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.20 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்தக்குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்து முருகா், விநாயகா் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story