நெல்லை வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வருஷாபிஷேக விழா

நெல்லை வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வருஷாபிஷேக விழா
வருஷாபிஷேகம் 
நெல்லை வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாநகரில் வரலாற்று சிறப்புமிக்க அழகிய மன்னர் ராஜகோபாலசாமி கோயிலில் நேற்று (ஜூன் 25) இரவு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபாலர், வேதநாராயணர், ஸ்ரீதேவி தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொழுது ரத வீதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

Tags

Next Story