மாயாண்டி சுடலை மாடசுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்

மாயாண்டி சுடலை மாடசுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்
மாயாண்டி சுடலை மாடசுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,ஆழ்வார்குறிச்சியில் மாயாண்டி சுடலை மாடசுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகத்தில் திரளானன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி மாயாண்டி சுடலை மாடசுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு சக்ரவர்த்தி மாயாண்டி சுடலை மாடசுவாமி சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கலச அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சிகளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story