ஊத்தங்கரை அருகே விசிக பேனர் கிளிப்பு: போலீசார் குவிப்பு

ஊத்தங்கரை அருகே விசிக பேனர் கிளிப்பு: போலீசார் குவிப்பு

பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்

ஊத்தங்கரை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிளிக்கப்பட்டாதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாவக்கல் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்து வைக்கப்பட்டிருந்த பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது மற்றும் தீயிடப்பட்ட நிலையில் பேனர் இருந்து அதை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆவேசம் அடைந்து சாலையில் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

சம்பவ பகுதிக்கு சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் காவலர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பயனளிக்காததால் கொந்தளித்த மகளிர் ஒரு கட்டத்தில் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது.

இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, துரைவளவன், முகாம்செயலாளர் நிர்மல் குமார், பிரேம்குமார், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story