வி.சி.க., ஆர்ப்பாட்டம்

வி.சி.க., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட வி.சி.க., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட வி.சி.க., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும், வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமை தாங்கி னார். நகர செயலாளர் சரவணன் வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார், இதில் மாவட்ட செயலாளர்கள் விடுதலைச்செல்வன், திலீபன், மலைச்சாமி, தனஞ்செழியன், பொன்னிவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன், அறிவர் அம்பேத்கர் போக்குவரத்துக்கழக தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை பொதுச் செயலா ளர் கணேசன், நிர்வாகிகள் குணவழகன், நாவரசன், இரணியன், எழில்மாறன், வக்கீல் அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

Tags

Next Story