விசிக புறக்கணிப்பு ? - காங்கிரஸ் வேட்பாளர் வீடு முற்றுகை

விசிக புறக்கணிப்பு ? - காங்கிரஸ் வேட்பாளர் வீடு முற்றுகை

விசிக மாவட்ட செயலாளர் செல்வம் 

ஒசூரில் திமுக மாவட்ட செயலாளர் விசிகவினரை புறக்கணிப்பதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் வீட்டின் முன்பு விசிகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என ஒசூர் எம்.எல்.ஏவும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பிரகாஷ் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கூட்டணி தேர்தல் பொருப்பாளர் இளங்கோவனிடம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விசிக செயலாளர் செல்வம் தெரிவித்தும் பூத் உள்ளிட்ட செலவுகளுக்கு விசிகவினரை திமுக கண்டுக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

விசிகவை சாதி ரீதியாக திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பேசி வருவதாகவும், விடுதலைச் சிறுத்தைகளை தொடர்ந்து அவமானப்படுத்தும் நோக்கில் பிரகாஷ் செயல்படுவதாக கூறி விசிக மாவட்ட செயலாளர் செல்வம் ஓசூரில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வீட்டிற்கு முன்பு கட்சியினருடன் நேற்று மாலை 4.30 மணிக்கு வந்தார். இந்த தகவல் தெரிந்தும் வேட்பாளரோ, திமுக எம்எல்ஏ என யாரும் வராத நிலையில் விசிகவை மதிக்காத திமுகவை எதிர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story