மத்திய அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

விசிகவினர் ஆர்பாட்டம்

சிவகங்கையில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பு செய்து, ரூபாய் 21 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story