சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விசிக ஆர்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் இடம் நீக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் குழந்தை வள்ளுவன் இளம் சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் குட்டி வளவன் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மரியமைக்கேல், அமல் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story