நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவிலில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை கட்சி சார்பில், திருமாவளவன் மற்றும் இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரகளை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், வாக்கு இயந்திரத்தை தடை செய்யக் கேட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தென் மண்டல துணை செயலாளர் திருமா வேந்தன், மாநில துணை செயலாளர்கள் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், ஈழவளவன், ஒருங்கிணைந்த குமரி மாவட்ட சமூக நல்லிணக்க அமைப்பாளர் பத்மராஜா, கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தொல்காப்பியன் மற்றும் சுசீந்திரம் பேரூராட்சி உறுப்பினர் கலைசெல்வி கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி மணிகண்டன் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story