அண்ணாமலையார் கோவில் கலையரங்கில் வீணை - வாய்ப்பாட்டு நிகழ்ச்சி

அண்ணாமலையார் கோவில் கலையரங்கில் வீணை - வாய்ப்பாட்டு நிகழ்ச்சி

இசை நிகழ்ச்சி 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றுவருகிறது. 6ம்நாள் விழாவில் கோவில் கலையரங்கில் ஸ்ரீமணி திலகா இசை பயிற்சி மையத்தின் சார்பில் நிர்வாக இயக்குநர் அஸ்மத்துல்லா தலைமையில் வீணை மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசை பயிற்சி மையத்தின் சார்பில் கலந்து கொண்ட வீணை மற்றும் வாய்ப்பாட்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை நிகழ்ச்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நலம் மருத்துவமனை மருத்துவர் லாவண்யா மனோகர் இசை ஆசிரியர் சு.ரெத்தினசெல்வி மற்றும் மாணவ மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார். இதில் ஸ்ரீமணிதிலகா இசை பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story