ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக வீரக்குமார் நியமனம்

ஜெயலலிதா பேரவை  மாநில துணைச் செயலாளராக வீரக்குமார் நியமனம்

ஈரோட்டில் சேர்ந்த வீரக்குமாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக நியமித்து அறிவித்துள்ளார்.

ஈரோட்டில் சேர்ந்த வீரக்குமாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக நியமித்து அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி அதிமுக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் சரியாக செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நியமித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே. வி. ராமலிங்கம் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளராக இருந்த வீரக்குமாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக நியமித்து அறிவித்துள்ளார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு காட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags

Next Story