வீரமாத்தியம்மன் முப்பூஜை திருவிழா

வீரமாத்தியம்மன் முப்பூஜை திருவிழா

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் முப்பூஜை திருவிழா நடந்தது.

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் முப்பூஜை திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஸ்ரீவீரமாத்தியம்மன், ஸ்ரீவீரகாரன், ஸ்ரீஐயனாரப்பன், ஸ்ரீகன்னிமார், ஸ்ரீ எதிரடி வீரன், ஸ்ரீ கருப்பு சாமி தெய்வங்களுக்கு முப்பூஜை திருவிழா மார்ச். 1ல் 108 சங்கு பூஜையுடன் துவங்கியது. சுவாமிகளுக்கு மஞ்சள் முடிப்பு கட்டுதல், கொடியேற்றம், மார்ச். 7ல் காவிரி ஆற்றிலிருந்து பம்பை வாத்தியங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம், முப்பாடு அழைத்தல் நடந்தது. மார்ச். 8ல் ஸ்ரீவீரமாத்தியம்மன், ஸ்ரீவீரகாரன், ஸ்ரீஐயனாரப்பன், ஸ்ரீகன்னிமார், ஸ்ரீ எதிரடி வீரன், ஸ்ரீ கருப்பு சாமி தெய்வங்களுக்கு முப்பூஜை திருவிழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று தெருக்கூத்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story