பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீதி உலா

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீதி உலா
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மகம் வீதி உலா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மகம் வீதி உலா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிசியங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆய்க்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story