மழையினால் வரத்து குறைவு: காய்கறிகள் விலை உயா்வு

மழையினால் வரத்து குறைவு: காய்கறிகள் விலை உயா்வு

காய்கறி விலை உயர்வு

தொடா் மழையினால் வரத்து குறைவு காரணமாக திருச்சி சந்தைகளில் அனைத்துக் காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சி காந்திசந்தை, பால்பண்ணை சந்தை, உறையூா் சந்தைகளுக்கு காய்கறிகள் வருகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மையமும் உருவாகியுள்ளதால், மாநிலத்தில் பரவலாக மழை பொழிவு காணப்படுகிறது. தொடா் மழையினால் திருச்சி காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால், அனைத்துக் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

Tags

Next Story