மாமண்டூர் அருகே வாகன விபத்து, போக்குவரத்து நெரிசல்

மாமண்டூர் அருகே வாகன விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் ஒருவர் காயம். நாளை திருமணம் நடைபெற விருந்த மணமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்..

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஒரு அரசு பேருந்து மூன்று கார்கள் மோதிய விபத்தில் மதுராந்தகம் பகுதி சேர்ந்தவர் காயமடைந்தார்.. அவருக்கு பின்னால் வந்த நாளை திருமணம் நடைபெறவிருக்கும் புதுமண தம்பதிகள் கார் மோதியதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இவரது காருக்கு பின்னால் மற்றொரு காரும் மோதியதால் அடுத்தடுத்து ஒரு பேருந்து மூன்று கார்கள் என விபத்து ஏற்பட்டதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன..இதனை அடுத்து படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்..இதன் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

Tags

Next Story