வெள்ளகோவிலில் வாகனங்களில் பேட்டரி திருட்டு

வெள்ளகோவிலில் வாகனங்களில் பேட்டரி திருட்டு

பேட்டரி திருட்டு

வெள்ளக்கோவிலில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரி திருட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் பொக்லைன் வாகனங்கள் ட்ராக்டர்கள் லாரிகள் பயன்கள் ஆகியவை பகல் நேரத்தில் பழைய பஸ் நிலையம் பழைய சந்தைப்பேட்டை நிறுத்தங்களில் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வருகின்றனர் இரவு நேரங்களில் தங்களுடைய வாகனங்களை எடுத்துச் செல்லும் உரிமையாளர்கள் அவற்றை வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கின்றனர் ஒரு சில வாகனங்கள் இரவிலும் நிறுத்தத்திலேயே நிறுத்தப்படுகிறது. இவர் வெள்ளகோவில் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்த இரண்டு பொக்லைன் வாகனங்கள் மற்றும் ஒரு டிராக்டர் பேட்டரிகள திருட்டுப் போனது இதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் அருகில் ஆறு கனரா வாகனங்களில் பேட்டரிகளும் திருடப்பட்டன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல்துறை உதவியுடன் வாகன உரிமையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story