ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் எரிந்து சேதம்!

ஈஞ்சம்பாக்கத்தில் மின்கம்பி உரசி வைக்கோலுடன் வாகனம் எரிந்து சேதம்!

தீ

விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் கம்பி, மினி டிரக்கில் உள்ள வைக்கோல் கட்டுகள் மீது உரசியதால், அவை தீப்பிடித்து எரிந்தன.
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், ராஜசேகர் என்பவருடைய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட, 19 வைக்கோல் கட்டுகளை, மினி டிரக் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, முருகன் என்பவர், வாழப்பாடிக்கு கொண்டு செல்ல நேற்று காலை 9:00 மணிக்கு புறப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் கம்பி, மினி டிரக்கில் உள்ள வைக்கோல் கட்டுகள் மீது உரசியதால் அவை தீப்பிடித்து எரிந்தன. காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், சரக்கு வாகனமும் வைக்கோல் கட்டுகளும் முழுமையாக எரிந்தன. இதுகுறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story