தென்னிலை அருகே பைக் மீது வாகனம் மோதி விபத்து

கரூர் மாவட்டம், தாந்தோணி மலை ஊரணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் மதியழகன் வயது 40. இவர் நவம்பர் 5ஆம் தேதி இரவு 8:15 மணி அளவில் கரூர்- கோவை சாலையில் தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசு பிரிவு அருகே அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த நான்கு சக்கர அடையாளம் தெரியாத வாகனம் மதியழகன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மதியழகனுக்கு வலது இடது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி மகேஸ்வரி வயது 41 என்பவர் தென்னிலை காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நவம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வழக்கு பதிவு செய்து, மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags

Next Story