வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாம்

வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாம்

தூத்துக்குடியில் கனமழையினால் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் கனமழையினால் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழையினால் பாதிப்படைந்த இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 1500 முதல் 3000 வரையிலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 10000 முதல் 20000 வரை உடனடி தீர்வாக நிதியுதவி வழங்கும் முகாம் அண்ணா நகரின் பிரதான சாலையில் உள்ள ஈகவிட்டாஸ் பேங்க் அருகில் நடைபெற்றது. இம்முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "இந்த முகாமில் தீ நியு இந்த அஷ்யுரஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, மற்றும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். முழுவதும் பாதிப்படைந்த வாகனங்களுக்கும், வீடுகள் மற்றும் பொருள் வைக்கும் கிடங்குகளுக்கு காப்பீடு செய்திருந்தால் இழப்பிற்கு ஏற்றார் போல் தீர்வு காணப்படும் என்றார்.

Tags

Next Story