திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வாகனம் திருட்டு: திருச்சியில் அபராதம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வாகனம் திருட்டு: திருச்சியில் அபராதம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன வாகனத்திற்கு திருச்சியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன வாகனத்திற்கு திருச்சியில் அபராதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணனின் இருசக்கர வாகனம் திருடு போனது.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் சரவணனின் வாகனத்திற்கு திருச்சியில் அபராதம் விதித்துள்ளதாகவும், அதற்கு பணம் செலுத்திய குறுந்தகவல் வந்ததுள்ளது. இது குறித்து சரவணன் நகர் வடக்கு காவல் நிலையத்தில் குறுந்தகவலை காண்பித்து மீண்டும் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story