வாகன திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

திருச்செங்கோட்டில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரத்தின் மைய பகுதியான தொண்டிகரடு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார், இவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு இன்று காலை சாவியோடு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்ட மர்ம நபர் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

Tags

Next Story