சிவகாசியில் குழந்தைகள் தூக்கிய வேலவன் காவடி

சிவகாசியில் குழந்தைகள் தூக்கிய வேலவன் காவடி
சிவகாசியில் குழந்தைகள் தூக்கிய வேலவன் காவடி...
சிவகாசியில் குழந்தைகள் வேலவன் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.சிவகாசியில் வைகாசி விசாக திருவிழா வெகு விமா்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.சிவகாசி முத்தாலம்மன் கோயிலில் தொடங்கிய வேலன்காவடி முருகன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், திருத்தங்கல் ஐயா நாராயணசாமி கோயில்,

திருத்தங்கல் முருகன் கோயில் சென்று வழிபாடு செய்தனர். ஒவ்வொறு கோயிலில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்கி,பஜனை செய்து வழிபாடு செய்தனர்.கந்தவேல் முருகா,கதிர்கேல் முருகா என்று கோஷங்கள் முழங்க குழந்தைகள் காவடி எடுத்து சென்றனர்.பக்தர்கள் கூறும்போது,தமிழ் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமாக காவடி எடுத்தல் திகழ்கின்றது.

சிவகாசியில் கடந்த 11ஆண்டுகளாக காவடி எடுத்து வழிபாடு செய்து வருகின்றோம்.குழந்தைகளுக்கு கல்வி அறிவு காவடி எடுத்து சிவகாசியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story