வெள்ளகோவில் : தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு

வெள்ளகோவில் : தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு

தண்ணீர் பந்தல் 

வெள்ளகோவில் நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமட்டம் குறைவாகவே உள்ளது. வெள்ளகோவில் நகராட்சி சார்பில் காங்கேயம் சாலை பழைய பஸ் நிலையம் நிழற்குடையில் தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். தண்ணீர் பந்தலில் நகராட்சி பணியாளர்கள் தண்ணீர், நீர்மோர் வழங்கி வருகின்றனர். அப்போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவை குறித்த பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், பொறியாளர் காண்டீபன் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story