தொடர் விடுமுறை எதிரொலி : 115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தொடர் விடுமுறை எதிரொலி : 115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வேலூர் மாவட்டத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி வேலூர் மாவட்ட போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 115 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆயுதபூஜையையொட்டி இன்று முதல் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வார இறுதி நாள் மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் சார்பில் சென்னை பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதாவது, வேலூருக்கு 50 சிறப்பு பேருந்துகள், ஆற்காடு 10, ஓசூர் 10,தர்மபுரி 5, திருப்பத்தூர் 20, குடியாத்தம் 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதே போல வேலூர் இருந்து பெங்களூருக்கு தலா 5 பேருந்துகள் வீதம் 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், வரும் 25ஆம் தேதி ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு வழக்கமாக செல்லும் பேருந்துகள் தவிர, கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story