வேலூர் மாவட்டத்தில் 332 மி.மீ மழை பதிவு

வேலூர் மாவட்டத்தில் 332 மி.மீ மழை பதிவு

பைல் படம் 

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேரணாம்பட்டு பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரை என கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை வேலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது, காட்பாடி ரயில் சந்திப்பு பகுதியில்1.50 மில்லி மீட்டர் மழையும், விரிஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் 15.60 மில்லி மீட்டர் மழையும்,பேரணாம்பட்டு பகுதியில் 12 செ.மீ. மழையும், அனைக்கட்டு பகுதியில் 7 செ மீ மழையும், மோர்தானா அணை பகுதியில் 5.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 332.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், இதன் சராசரி அளவு 27.69 சென்டி மீட்டர் ஆகும்.

Tags

Next Story