புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வேலூர் மாவட்ட எஸ்பி

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வேலூர் மாவட்ட எஸ்பி

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எஸ்பி

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு பிறப்பை பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார்.

புத்தாண்டை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆலயங்கள் மற்றும் பிரபல தனியார் ஹோட்டல்களிலும் ஆடல், பாடல்களுடன் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடினர்.

அசம்பாவிதம ஏற்படாமல் இருக்க இரவு 9 மணி முதல் வேலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் சுமார் 940 மேற்பட்டோர் சோதனை சாவடிகள் அமைத்து பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் விதிமுறையை மீறி சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டு பிறந்ததை ஒட்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள், சாலை வழியாக வந்த மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர், ஆட்டோ ஓட்டுநர்கள், என அனைவருடன் இணைந்து சாலையில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags

Next Story