எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் கோளாறு..! வேலூரில் பரபரப்பு..!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் கோளாறு..! வேலூரில் பரபரப்பு..!!

மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் கோளாறு

வேலூர் அருகே மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பயணிகள் அச்சமடைந்தனர்.

சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் சந்திப்பு அருகே இன்று மாலை வந்தது. அப்போது ரயிலின் S2 பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் காட்பாடி ரயில் சந்திப்பு நடைமேடை எண் 1-ல் ரயில் நின்ற பிறகு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் புகை வந்ததற்கான காரணம் என்ன என ரயிலில் ஆய்வு செய்தனர். அதில், பிரேக் கோளாறு காரணமாக புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடைமேடையில் இருந்து சிறிது தூரம் ரயிலைக் கடக்க செய்து, லத்தேரி பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு பிரேக் (பைண்டிங் ) கோளாறு சரி செய்யப்பட்டது. பின்னர் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் காலத்தாமதமாக மங்களூர் நோக்கி புறப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட திடீர் பிரச்சனையால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதபோதும் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story