வேலூர் அரசு மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூர் அரசு மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கோப்பு படம் 

வேலூர் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அரசமரபேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் ( 44). இவர் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். வெங்கட்ராமனுக்கு திருமணம் ஆகவில்லை.

அவருக்கு தோஷம் இருப்பதால் திருமணம் நடைபெறாமல் இருந்ததாகவும், 44 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லையே என்று அவர் வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் வெங்கட்ராமன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story