வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலி!

வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலி!

காவல் நிலையம் 

அப்துல்லாபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள நாகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் லோகநாதன் (40).இவர் பெங்களூருவில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் லோகநாதன் லாரியை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.

அதற்காக அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று லோகநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் தலையில் பலத்த காயடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.இதுகுறித்து விரிஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story